புதுடெல்லி: ‘முல்லைப் பெரியாறு அணை பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளஅனுமதிக்கும்படி கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்,’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு துணைக்குழுவை கலைக்க கோரியும், அணை பாதுகாப்பு மற்றும் இயக்க முறைகள் சரியாக இல்லை என்றும் ஜாய் ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் உமாபதி நேற்று புதிய மனுவை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
வல்லக்கடவு முதல் முல்லைப் பெரியாறு வரையிலான 5 கிமீ நீளமுள்ள மலைப்பாதையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.