காஞ்சிபுரம்: டெல்லியில் விவசாயிகள் தொடங்கிய போராட்டம் ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி, காஞ்சிபுரத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் தேரடியில் தொமுச கவுன்சில் மாவட்டத் தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சாரங்கன், ஐஎன்டியுசி மாநில செயற்குழு உறுப்பினர் இராம.நீராளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், விவசாயிகள் சங்க மாநில துணைசெயலாளர் முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு, சிஐடியு மாநில செயலாளர் முத்துக்குமார், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு, திமுக மாவட்ட அவைத்தலைவர் சேகரன், ஏஐடியுசி தலைவர் சங்கையா, எச்எம்எஸ் பொது செயலாளர் ஆபத் சகாயம், அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் மகேந்திரன், பொருளாளர் ராமச்சந்திரன், தொமுச கவுன்சில் மாவட்ட செயலாளர் சுந்தரவரதன், போக்குவரத்துக் கழக தொமுச செயலாளர் ரவி, பொருளாளர் அரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.