புழல்: சென்னை புழல் தண்டனை சிறையில் சுமார் 600க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், புழல் சிறையின் அனைத்து பிளாக்குகளிலும் நேற்று போலீசார் வழக்கமான சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில், ஒரு மின்பெட்டியில் பதுக்கி வைத்திருந்த செல்போனை பறிமுதல் செய்து விசாரித்தனர்.