திண்டுக்கல் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான தனியார் நர்சிங் கல்லூரி தாளாளருக்கு 3 நாள் போலீஸ் காவல்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான தனியார் நர்சிங் கல்லூரி தாளாளருக்கு 3 நாள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது. போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முத்தனம்பட்டி நர்சிங் கல்லூரி ஜோதி முருகனுக்கு போலீஸ் காவல் விதித்து திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போக்சோ வழக்கில் போளூரில் 23ல் சரணடைந்தார் ஜோதிமுருகன்.

Related Stories: