ஹொனியரா: சீனா ஆதரவு நிலையை கைவிட வலியுறுத்தி சாலமன் தீவில் பொதுமக்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் வன்முறையாக மாறி வருவதால் பெறும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தெற்கு பசுபிக் பெருங்கடலில் நூற்றுக்கணக்கான தீவுகளை கொண்டுள்ள நாடு சாலமன் தீவு. இந்த நாட்டின் பிரதமர் மனாசே சோகாவரே, சமீபத்தில் தாய்வான் நாட்டுடனான தூதரக உறவுகளை துண்டித்துவிட்டு, சீனா உடன் தூதரக உறவுகளை ஏற்படுத்தினார். இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சீனா பக்கம் சாயும் சாலமன் தீவு அரசின் முடிவை பெரும்பாலான மாகாணங்களுக்கும் ஏற்க மறுத்தன. இதையடுத்து பிரதமர் மனாசே சோகாவரே பதவி விலக வலியுறுத்தி சாலமன் தீவுகளின் தலைநகரமான ஹொனியராவில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.