×

சீனா ஆதரவு நிலையை கைவிட கோரி சாலமன் தீவுகளில் பொதுமக்கள் தொடர் போராட்டம்: பிரதமர் பதவி விலக வலியுறுத்தல்

ஹொனியரா: சீனா ஆதரவு நிலையை கைவிட வலியுறுத்தி சாலமன் தீவில் பொதுமக்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் வன்முறையாக மாறி வருவதால் பெறும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தெற்கு பசுபிக் பெருங்கடலில் நூற்றுக்கணக்கான தீவுகளை கொண்டுள்ள நாடு சாலமன் தீவு. இந்த நாட்டின் பிரதமர் மனாசே சோகாவரே, சமீபத்தில் தாய்வான் நாட்டுடனான தூதரக உறவுகளை துண்டித்துவிட்டு, சீனா உடன் தூதரக உறவுகளை ஏற்படுத்தினார். இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சீனா பக்கம் சாயும் சாலமன் தீவு அரசின் முடிவை பெரும்பாலான மாகாணங்களுக்கும் ஏற்க மறுத்தன. இதையடுத்து பிரதமர் மனாசே சோகாவரே பதவி விலக வலியுறுத்தி சாலமன் தீவுகளின் தலைநகரமான ஹொனியராவில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

அப்போது காவல்துறைக்கும், மக்களுக்கும் இடையே வெடித்த மோதல் வன்முறையாக மாறியது. சைனா டவுன் பகுதியில் உள்ள சீன நாட்டினருக்கு சொந்தமான கடைகள், நிறுவனங்கள் கொளுத்தப்பட்டன. சாலமன் தீவுகளின் நாடாளுமன்ற கட்டிடத்திற்கும் தீ வைக்கப்பட்டதால் நாடு முழுவதும் பெறும் பதற்றம் நிலவுகிறது. சாலமன் தீவுகளில் உள்ள சீன நாட்டினர் தாக்கப்படுவதற்கும், அவர்கள் உடைமைகள் எரிக்கப்படுவதற்கும் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சாலமன் தீவுகள் அரசுடன் ஒன்றிணைந்து குழப்ப நிலைக்கு தீர்வு காணப்படும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது.


Tags : Solomon Islands ,China , China, Solomon Islands, Civil Struggle
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்