மும்பை: பங்குசந்தையில் வாரத்தின் இறுதி நாளான இன்று காலையில் வர்த்தகம் சரிவுடனே தொடங்கின. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் சரிந்து 57,380 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 400 புள்ளிகள் 17,120 புள்ளிகளாக இருக்கின்றன. உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரஸ் பரவல் பங்குசந்தையிலும் எதிரொலித்தது. வங்கி, உலோகம், வாகனம், மருந்து, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட அனைத்து துறை பங்குகளும் சரிவுடனே காணப்பட்டன.