மியான்மர்: மியான்மர் - இந்தியா எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் வங்கதேசம், மியான்மர், இந்தியாவின் மிசோரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பதிவானது. இந்தியா - மியான்மர் எல்லையில் அதிகாலை 5 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கதேசம் நாட்டின் சிட்டகாங்கில் இருந்து 175 கிலோ மீட்டர் தொலைவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவாகியுள்ளது.