சென்னை: புளியந்தோப்பை சேர்ந்த ஆட்டோ டிரைவர் லாரன்ஸ் (25), காசிமேட்டை சேர்ந்த சந்தோஷ் (21), காசிமேடு போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் விமல்குமார் (43) ஆகிய மூவரும், புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் உள்ள ஒரு பிரியாணி கடை முன்பு பிளாட்பாரத்தில் இரவு 12 மணி அளவில் அமர்ந்து மது அருந்திவிட்டு, கடும் ரகளையில் ஈடுபட்டனர். இவர்களை தட்டிக் கேட்டவர்களை கத்தியால் குத்தவும் முயன்றுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கீழ்ப்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், கீழ்ப்பாக்கம் தலைமை காவலர் வேல்ராஜ் அங்கு விரைந்து விசாரித்தபோது, அவரையும் மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.