சென்னை: தேனாம்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்த காவலர் ஆர்.சுப்பிரமணியம் என்பவர், விஐபி பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வந்தார். இவர், நாமக்கல்லை சேர்ந்த கவிதா என்பவரிடம் வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் வாங்கியுள்ளார். ஆனால், வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுபற்றி கேட்டபோது, கவிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, கவிதா தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், சுப்பிரமணியம் மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.