மதுராந்தகம்: காஞ்சி தெற்கு மாவட்டம் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர் கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய பொறுப்பாளர் பொன்.சிவகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் ஜெய்சங்கர், ஒன்றிய துணை செயலாளர்கள் தணிகை அரசு, ஏகாம்பரம், பத்மா செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி அரசு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தெய்வசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத் தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம், மாவட்ட கவுன்சிலர் ராஜா ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.