திமுக பொது உறுப்பினர் கூட்டம்: க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு

மதுராந்தகம்: காஞ்சி தெற்கு மாவட்டம் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர் கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய பொறுப்பாளர் பொன்.சிவகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் ஜெய்சங்கர், ஒன்றிய துணை செயலாளர்கள் தணிகை அரசு, ஏகாம்பரம், பத்மா செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி அரசு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தெய்வசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத் தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர்  க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம், மாவட்ட கவுன்சிலர் ராஜா ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை வழங்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக சார்பில் பல போராட்டங்கள் நடத்தி வெற்றி பெற்றது, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்தநாளன்று  கிளைகள் தோறும் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்க வேண்டும். ஒன்றிய பொறுப்பாளராக பொன்.சிவகுமாரை நியமனம் செய்ததற்கு நன்றி தெரிவிப்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: