பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு விருப்ப மனு கொடுக்க இன்று கடைசி நாள்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வேண்டுகோள்

கும்மிடிப்பூண்டி: பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் தங்கள் விருப்ப மனுக்களை ஒப்படைக்க மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கை: திருவள்ளுர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட பேரூராட்சிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பொறுப்புகளுக்கு போட்டியிட விருப்ப மனு பெற்ற உள்ளது.

எனவே, திமுகவினர் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை 26ம் தேதி (இன்று) காலை 9 மணி முதல் மாலை 4 வரை கவரைப்பேட்டை, ஜி.என்.டி சாலையில் அமைந்துள்ள ஜெ.எம். திருமண மண்டபத்தில் பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கும்மிடிப்பூண்டி கி.வேணு க.சுந்தரம், இ.ஏ.பி.சிவாஜி, சி.எச்.சேகர், ஜெ.மூர்த்தி, டி.வி.தமிழன் இளங்கோவன், மு.பகலவன், கேவிஜி. உமாமகேஸ்வரி, ரவி, வெங்கடாஜலபதி, கோதண்டம், அன்புவானன், கதிரவன் முன்னிலையில் விண்ணப்ப மனுக்களை, உரிய கட்டணத்துடன் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர்  கூறியுள்ளார்.

Related Stories: