கான்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வீரர்கள் பொறுப்பாக விளையாடியதால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 258ரன் குவித்துள்ளது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் நேற்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் அரங்கில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா முதலில் களமிறங்கியது. அஜிங்கிய ரகானே தலைமையிலான அணியில் ஷ்ரோயாஸ் அய்யர் அறிமுக வீரரராக களமிறங்கினார். அவருக்கு டெஸ்ட் வீரருக்கான தொப்பியை முன்னாள் கேப்டன் காவஸ்கர் வழங்கினார். கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியிலும் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா அறிமுகமானார். இந்திய தரப்பில் தொடக்க வீரர்களாக மயாங்க் அகர்வால், ஷூப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். கேல் ஜேமிசன் வேகத்தில் மயாங்க் 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.