திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் விடுத்துள்ள அறிக்கை: விரைவில் நடைபெற உள்ள திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்று சென்ற திமுகவினர் தங்களை பற்றிய முழு விவரங்களை விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து உரிய கட்டணத்துடன் திருத்தணி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள என்.எஸ்.கே.டவரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் (இன்று) 25 ம் தேதி மற்றும் 26 ம் தேதி ஆகிய 2 நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.