உத்திரமேரூர்: உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஊட்டச்சத்து உணவுகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட திட்ட அலுவலர் சற்குணா தலைமை தாங்கினார். மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் பழனி, வட்டார மருத்துவ அலுவலர் உமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.