இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தின் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (29ம் தேதி) காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு காணலாம். மேலும், கூட்டம் முடிந்ததும் பாரத பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தில் இணையவழி விவசாயிகள் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, சொட்டு நீர் பாசனம் , தெளிப்பு நீர் பாசனம் தேவைப்படும் விவசாயிகள் ஆதார் அட்டை, சிட்டா, அடங்கல், நில வரை படம், ரேஷன் கார்டு நகல்களுடன், பாஸ்போட் சைஸ் போட்டோ - 1, இணையவழி சிறு / குறு விவசாய சான்று  சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளலாம். அன்றைய தினம் கோவிட்-19 தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதால் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆதார் அட்டை நகலை காண்பித்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.  மேலும், இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். மேலும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: