பள்ளிப்பட்டு: அம்மனேரி கிராமத்தில் கிராம சபை கூட்டத்தை நடத்தியதாக பதிவுசெய்த ஊராட்சி செயலாளரை கண்டித்து பிடிஒ அலுவலகம் முன் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். ஆர்.கே. பேட்டை அடுத்த அம்மனேரி கிராமத்தில் கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி முன்னிட்டு, நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் பங்கேற்றால் மட்டுமே கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் வெளியேறினர். இந்நிலையில், கிராம சபை கூட்டம் நடந்ததாக போலியாக பதிவுசெய்த ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கிராமத்தில் குடிநீர், சாலை, பள்ளி கட்டிடம், மேல்நிலை நீர்தேக்க தொட்டி, உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி கிராம மக்கள் 100ககும் மேற்பட்டோர் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.