கல்லூரி மாணவர்களிடையே பயங்கர மோதல் 2 பேருக்கு அரிவாள் வெட்டு

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே, இரண்டு வாலிபர்களை, 20க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கத்தி, உருட்டுகட்டை போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். படுகாயம் அடைந்த அவர்கள் அலறி துடித்தனர். இதை பார்த்த, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததும் அந்த வாலிபர்கள் ஓடிவிட்டனர். தகவலறிந்த மீஞ்சூர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று படுகாயமடைந்த 2 பேரை மீட்டு மீஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக, வழக்குபதிந்து, விசாரணை மேற்கொண்டனர். அதில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் (21), ஈகுவார்பாளையம் ஆகாஷ்(21) ஆகியோரை,  சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் கத்தி, உருட்டுகட்டை போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கியது தெரியவந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: