திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தாதகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பன்னி ராஜா (எ) அழகர் (60). . இவரது 4 மகள்களுக்கும், மூத்த மகன் மணிகண்டனுக்கும்(22) திருமணமாகி விட்டது. இளைய மகன் பாலசுப்பிரமணி (19). டூவீலர் மெக்கானிக். இவர் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகிவிட்டதால் தனக்கும் திருமணம் செய்து வைக்கும்படி தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவும் தந்தை அழகருக்கும், பாலசுப்பிரமணிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அழகர் வெளியில் சென்று விட்டார்.