ஈரோடு: ஈரோடு சூளை, சி.எஸ்.நகரை சேர்ந்தவர் வள்ளல் பாபு என்கிற பாபு (56). இவர், ஈரோடு கங்காபுரத்தில் சோப்பு தயாரிப்பு நிறுவனம் உள்பட பல்வேறு சிறு நிறுவனங்களை நடத்தி வந்தார். தென்னிந்திய நுகர்வோர் மற்றும் பாதுகாப்பு குழுவில் துணை செயலாளராகவும் இருந்து வந்தார். மேலும், ஈரோடு அசோகபுரம் மெயின் ரோட்டில் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். தினசரி வசூல், வார வசூல், மாத வசூல் என்ற பெயரில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்தார். 250க்கும் மேற்பட்டோர் இவர் நடத்தி வந்த ஏலச்சீட்டில் பணம் செலுத்தி வந்தனர்.