சொல்லிட்டாங்க...

* இந்தியா-ஆசியான் நாடுகளின் நெருங்கிய நட்புறவு, அடுத்தாண்டு 30 ஆண்டுகளை கடக்கிறது. 2022ம் ஆண்டு ஆசியான்-இந்தியா நட்பு ஆண்டாக கொண்டாடப்படும். - பிரதமர் மோடி

* பாராளுமன்ற ஜனநாயகத்தில் பெகாசஸ் பிரச்னையை எழுப்பி தீர்வுகாண முயன்ற எதிர்கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் மூலம் தீர்வு கிடைத்துள்ளது வரவேற்புக்குரியது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* பெகாசஸ் உளவு மென்பொருள் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றமே சிறப்பு நிபுணர் குழுவை அமைத்துள்ளதை மநீம வரவேற்கிறது. - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

* அனல் மின்நிலைய மாசுக்களால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். சுற்றுச்சூழலும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

Related Stories: