பெங்களூரு: சுற்றுலா மூலம் பண்பாடு, கலாச்சாரத்தை போற்றும் மாநிலமாக தமிழகம் இருப்பதாக தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார். ஒன்றிய அரசின் சுற்றுலா மற்றும் கலாசாரா துறை சார்பில் தென்மாநில சுற்றுலா மற்றும் கலாசாரதுறை அமைச்சர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு பெங்களூருவில் உள்ள தனியார் நட்சத்திர ஒட்டலில் நேற்று தொடங்கியது. இதை ஒன்றிய சுற்றுலா துறை இணையமைச்சர் ஜி.கிஷன்ரெட்டி தொடங்கி வைத்தார். ஒன்றிய இணையமைச்சர்கள் எல்.முருகன், பகவந்த கூபே, தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன், புதுச்சேரி சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் உட்பட பல்வேறு மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர்.
பெங்களூருவில் சுற்றுலா, கலாசாரத்துறை அமைச்சர்கள் மாநாடு தமிழக சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் மதிவேந்தன் தகவல்
- சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர்கள் மாநாடு
- பெங்களூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்
- மாதிவேந்தன்