தடுப்பூசி பணியில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் குடியரசு தினத்தில் முதல்வர் வழங்குவார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில்7வது மாபெரும் தடுப்பூசி முகாம் வரும் 30ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட துணை இயக்குநர்களுடன் மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆலோசனை நடத்தினார்.  அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,  ‘‘தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் அலுவலர்களுக்கு முதல்வர் கையால் குடியரசு தினத்தன்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். குடியரசு தினத்தன்று முதல்வர் கையால் கொடுக்கப்படுவது என்பது நம்மை அடையாளப்படுத்துவது ஆகும். உழைப்பவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். மேலும் தமிழகத்தில் தற்போது வரை 5.44 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: