ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் மினி பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து நேரிட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரில் தாத்ரி நகரில் இருந்து தோடா நோக்கி கிளம்பிய மினி பேருந்து சுய் கௌரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டோடியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இந்த கோர விபத்தில் பேருந்து கடுமையாக சிதைந்தது. பேருந்தில் பயணித்த 11 பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் படுகாயமடைந்தனர்.