ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள செர்தாரி பகுதியில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதி திடீரென ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். இதனையடுத்து, ராணுவ வீரர்களால் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.