சென்னை: ராம்குமார் மரணத்தில் நிலவும் சந்தேகம் தொடர்பாக பிரேத பரிசோதனை செய்த மருத்துவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை அடையாறில் மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜரான மருத்துவர் செல்வகுமாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறையில் மின்சாரம் தாக்கி ராம்குமார் இறக்கவில்லை என மருத்துவர்கள் கூறியதாக வழக்கறிஞர் ராம்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.