சென்னை: அறங்காவலர்கள் நியமனத்துக்கு பிறகே கோயில் நகைகள் உருக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு ஐகோர்ட்டில் உத்தரவாதம் அளித்துள்ளது. அறங்காவலர்களை நியமிக்கும் வரை கோயில் நகைகளை உருக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கக்கூடாது. மேலும் கோயில் நகைகளை உருக்க தடை விதிக்கக் கோரி வழக்கில் அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.