சென்னை: உயர்கல்வித்துறையின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். உயர்கல்வித்துறையின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரூ.102 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக சென்னை தலைமை செயலகத்தில் இருந்து திறந்து வைத்துள்ளார். உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கக்கூடிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. திருச்சி, சிவகாசி, விருத்தாச்சலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு கலை கல்லூரிகளில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.