புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 3024 மதுபாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது

விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 3024 மதுபாட்டில்கள் விழுப்புரம் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் கிளியனூர் சோதனை சாவடியில் நிற்காமல் சென்ற சிறிய ரக சரக்கு வாகனத்தை கொந்தமூரில் போலீசார் மடக்கி பிடித்தனர். இதனை சோதனை செய்தபோது 63 பெட்டிகளில் 3024 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: