பல்லாவரம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் சட்ட விரோதமாக இருபத்து 24 நேரமும் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மகேஸ்வரிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. அதன்படி நேற்று பம்மல் நாகல்கேணி பிரதான சாலையில் உள்ள கடை இரு டாஸ்மாக் பார்களில் கலால் உதவி ஆணையாளர் லெட்சுமணன் மற்றும் சங்கர் நகர் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.