பழங்குடியின மக்கள் தொழில் செய்ய ரூ50 லட்சம் நிதி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பாரம்பரிய, சமூக சுகாதார திறன் 100 பழங்குடியின நபர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு 2 மாத களப்பயிற்சியோடு 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். சான்றிதழ் பெறுபவர்கள் சுயமாக தொழில் துவங்க ஏதுவாக உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட உதவிடும் வகையில் 100 பழங்குடியின பயனாளிகளுக்கு தலா ரூ50,000 வீதம் ரூ50 லட்சம் செலவில் மானியமாக வழங்கப்படும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்  பேரவையில் தெரிவித்தார்.

அதை செயல்படுத்தும் வகையில், களிம்பு, மாத்திரை செய்யும் பொடிகள் என பாரம்பரிய முறையில் மருந்துகளை தயாரிகக்க சான்று பெற்றவர்களுக்கு சுயமாக தொழில் துவங்க ஒரு நபருக்கு ரூ50,000 வீதம் 100 பேருக்கு ரூ50 லட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: