செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு: உணவு தயாரிக்கும் கூடத்தையும் பார்வையிட்டார்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு செய்தார். உணவு தயாரிக்கும் இடத்துக்கும் சென்று பார்வையிட்டார். விழுப்புரம் மாவட்டம், முதலியார்குப்பத்தில் “இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைப்பதற்காக சென்னையில் இருந்து செல்லும் வழியில், செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கத்தில் உள்ள பெ.கிருஷ்ணா அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது முதல்வரிடம், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெர்னாஸ் ஜான்,  பள்ளியில் மொத்தம் 488 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.  தற்போது 9 முதல் 12ம் வரையிலான வகுப்புகள் நடந்து வருகிறது. மாணவர்கள் வருகை சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின், வகுப்பு அறைகளுக்கு நேரில் சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் உரையாடினார், கல்வியில் மிகுந்த கவனம் செலுத்துவதோடு, ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.

பின்னர், பள்ளியின் அனைத்து வகுப்பு அறைகள், ஆய்வகம், உணவு தயாரிக்கும் கூடம் ஆகியவற்றையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மாணவர்களுக்கு தினசரி உணவு வழங்கும் பட்டியலில் உள்ளவாறு மதிய உணவு தயாரிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.  நிகழ்வில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: