தமிழகத்தில் 1,075 பேருக்கு கொரோனா

சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,21,553 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 1075 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,98,493 ஆக உள்ளது. நேற்று 1,315 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,50,145 ஆக உயர்ந்துள்ளது.

12 பேர் நேற்று உயிரிழந்தனர். சென்னையில் நேற்று 139 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. கோவையில் 125 பேர், செங்கல்பட்டில் 90 பேர், ஈரோடு 71 பேர் என அதிகபட்ச பாதிப்பு காணப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: