மேட்டுப்பாளையம்: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி குஞ்சப்பனையை சேர்ந்தவர் ராமராஜ் (23). விவசாயி. இவரது மனைவி சித்ரா (20). இவர் தனது வீட்டில் பப்பி என்ற நாயை செல்லமாக வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ராமராஜ் சிறுமுகை அடுத்த குஞ்சப்பனை செட்டில்மென்ட் உள்ள தோட்டத்தில் வேலை செய்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் ஒரு கரடி தோட்டத்துக்குள் புகுந்தது. இதைப்பார்த்த ராமராஜ் அதிர்ச்சியடைந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் கரடி அவரது தலையில் தாக்க முயன்றது. அப்போது கைகளால் கரடியை தடுத்தார். இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. பயத்தில் ராமராஜ் அலறியடித்து ஓடியபோது, அவரை கரடி விரட்டியது.