ஈரோடு: ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு எஸ்கேஎம் என்ற பெயரில் கால்நடை தீவன உற்பத்தி, முட்டை மற்றும் முட்டை பவுடர் ஏற்றுமதி, சித்த மருத்துவமனை, சித்த மருந்து உற்பத்தி ஆலை மற்றும் எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களின் தலைவராக எஸ்.கே.மயிலானந்தன் உள்ளார். அவரது மகன்கள் ஸ்ரீ சிவ்குமார், சந்திரசேகர் ஆகியோர் நிர்வாக இயக்குநர்களாக உள்ளனர். இந்நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.