திருமலை: திருப்பதி கோயில் அறங்காவலர் குழுவில் குற்ற பின்னணி உள்ளவர்களை நியமித்த வழக்கில் செயல் அலுவலர் உட்பட 18 உறுப்பினர்களுக்கு மாநில உயர் நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உத்தரவிட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழுவில் குற்ற பின்னணி உள்ளவர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக பாஜ மாநில செய்தி தொடர்பாளர் பானுபிரகாஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. புகார்தாரர் தரப்பில் வழக்கறிஞர் அஸ்வினிகுமார் ஆஜரானார். அப்போது, முன்னாள் மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன்தேசாய் நியமனத்திற்கு அஸ்வினிகுமார் எதிர்ப்பு தெரிவித்தார்.