புதுடெல்லி: அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று ஒன்றிய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ஒன்றிய ஊரக அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசியதோடு, அதுகுறித்த கோரிக்கை மனுவையும் அவரிகளிடம் வழங்கியுள்ளார். அதில்,‘2021ம் ஆண்டுக்கு ஒன்றிய அரசால் வழங்கப்படும் ரூ.984.23 கோடி ஊதிய நிலுவையை பண்டிகை காலத்தை அடிப்படையாக கொண்டு உடனடியாக வழங்க வேண்டும்,’ என குறிப்பிடப்பட்டுள்ளது.