பாட்னா: பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது பாட்னா பிரசாரக் கூட்டத்தின் போது நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 10 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் 2013ம் ஆண்டு, அக். 27ல் நடந்த மோடி் பிரசாரக் கூட்டத்தில் மேடை அருகே தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. இவ்வழக்கில் 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. , இந்த வழக்கு என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி குருவீந்தர் மெக்ரோத்ரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.