புதிதாக சேரும் அரசு ஊழியர்களுக்கு அந்தந்த மாவட்டத்திலேயே பயிற்சி

சென்னை: தமிழக அரசு செயலாளர் மைதிலி ராஜேந்திரன் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவு:புதிதாக அரசு பணியில் சேர்பவர்கள், பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பயிற்சியை அந்தந்த மாவட்டங்களிலேயே நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. முன்பு பவானிசாகர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற வேண்டிய சூழல் இருந்தது. இனி பயிற்சி பெற வேண்டிய அரசு பணியாளர்கள் அந்தந்த மாவட்டங்களிலேயே பயிற்சி பெறலாம். பவானிசாகர் பயிற்சி மையத்தில் இருந்து அதிகாரிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அடிப்படை பயிற்சிகளை வழங்குவார்கள்.

Related Stories: