துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்படும்: அரசு வழக்கறிஞர்

சென்னை: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என அரசு வழக்கறிஞர் கூறினார். குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரிய மனு மீது மீண்டும் விசாரணை நடத்தப்படும். துக்ளக் பத்திரிகையின் 51-வது ஆண்டு விழாவில் நீதிபதிகள் நியமனம் குறித்து குருமூர்த்தி கடும் விமர்சனம் செய்தார். உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்டவர்கள் என குருமூர்த்தி பேசியிருந்தார்.

Related Stories: