சென்னை: புதிதாக அரசு பணியில் சேரும் ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பதவி உயர்வு பெறும் அரசு பணியாளர்களுக்கு சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் பவானி சாகர் பயிற்சி மையத்தில் இருந்து அதிகாரிகள் சென்று பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.