கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் மேலும் 13,451 பேர் பாதிப்பு, 14,021 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ், 585 பேர் உயிரிழப்பு

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.55 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.42 கோடியை தாண்டியது. இன்று காலை 9.00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 13,451 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,42,15,653 ஆக உயர்ந்தது.

* புதிதாக 585 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,55,653 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 14,021 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,35,97,339 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,62,661 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் இதுவரை 1,03,53,25,577 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 55,89,124 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Related Stories: