நீர்மூழ்கி கப்பல் ரகசியம் கசிவு கடற்படை கமாண்டர் உட்பட 5 பேர் கைது

புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய நீர்மூழ்கி கப்பல் குறித்த ரகசியங்கள் கசிந்தது தொடர்பாக கடற்படையின் கமாண்டர் உட்பட 5 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து சமீபத்தில் கைலோ ரக நீர்மூழ்கி கப்பல்களை வாங்கிய இந்தியா அதனை நவீனப்படுத்தி வருகிறது. இது குறித்த ரகசிய விவரங்கள் கசிந்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், தற்போது பணியில் இருக்கும் கடற்படை கமாண்டர், ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் இருவர் உள்பட 5 பேரை சிபிஐ கைது செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக, டெல்லி, மும்பை, ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்பட 19 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியதில், டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related Stories: