சென்னை: சென்னை அரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், எம்.கே.மோகன் அறக்கட்டளை பங்களிப்புடன், செயல்வழி கற்றல் முறை திட்டம் மற்றும் மழலையர் வகுப்புகள் துவக்க விழா நேற்று நடந்தது. இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:செயல்வழிக் கற்றல் வகுப்பறைகள், மழலையர் வகுப்புகள் நேற்று அரும்பாக்கம் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் துவங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்த, தனியாரின் பங்களிப்பு அவசியம். தமிழகத்தில் 45,000க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள் உள்ளன. அனைத்து பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் கிடையாது. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை மழலையர் வகுப்பில், சேர்க்க தனியார் பள்ளிகளை நாடும் நிலையை மாற்றும் வகையில் நேற்று அரசுப்பள்ளியில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.