சென்னை: தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கலும், புதிய உறுப்பினர் சேர்ப்பு இயக்கமும் நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. இதில், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆபிரகாம் ராய் மணி, தேர்தல் பொறுப்பாளர் வேகி வெங்கடேஷ், தேர்தல் அலுவலர் ராஜூ பி.நாயர், காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா, வக்கீல் செல்வம், பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆபிரகாம் ராய் மணி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக இளைஞர் காங்கிரசில் பொறுப்புக்கு வர விரும்புபவர்கள் இன்று முதல் நவம்பர் 1ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.