3ம் நிலை நூலகர் சஸ்பெண்ட்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட நூலக அலுவலர் மந்திரம் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் முழுநேர கிளை நூலகத்தில், பணிபுரியும் 3ம் நிலை நூலகர் சுதா மீது தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுகுறித்து ஆய்வின் அடிப்படையில்  நூலகர் சுதா, தனது பொறுப்புகளை உத்திரமேரூர் 3ம் நிலை கிளை நூலகர் மனோகரனிடம் யாக ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தினோம். மேலும், செங்கல்பட்டு மாவட்ட மைய நூலகத்தில் உடன் பணியில் சேருமாறு உத்தரவிடப்பட்டது. ஆனால், இதுவரை அவர் முறையாக செயல்படுத்தவில்லை. இதனால், நூலகர் சுதா, பணியில் இருந்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: