இந்தூர்: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன் கரண் மோர்வாலை பாலியல் பலாத்கார வழக்கில் போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டம் பத் நகரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ முரளி மோர்வாலின் மகன் கரண் மோர்வால் (30) என்பவர் மீது பாலியல் வழக்கு நிலுவையில் உள்ளது. அவர் தலைமறைவாக இருந்த நிலையில், இன்று ஷாஜாபூர் மாவட்டம் மக்சி நகருக்கு அருகே கரண் மோர்வாலை இந்தூர் உள்ள மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதி சர்மா கைது செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்த ஆண்டு ஏப். 2ம் தேதி கரண் மோர்வால் மீது இந்தூர் மகளிர் காவல் நிலைய போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர்.