அத விடுங்கப்பா... இந்திய அணிக்கு கவாஸ்கர் மெசேஜ்!

இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலகக் கோப்பை தொடரில் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் மாஜி வீரர் கவாஸ்கர், கேப்டன் கோஹ்லி மற்றும் இந்திய அணிக்கு ஒரு ஆலோசனை வழங்கி உள்ளார். அதில் “இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வி குறித்து அதிகம் சிந்திக்கக் கூடாது.

அது தேவையில்லாதது. உலகக் கோப்பை தொடரின் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெறவே இந்தியா கவனம் செலுத்த வேண்டும். நிச்சயம் இந்திய வீரர்கள் தங்களை புதிய உத்வேகத்துடன் தயார்படுத்திக்கொண்டு அடுத்த போட்டிக்கு தயாராவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார் கவாஸ்கர்.

Related Stories: