சென்னை: ஸ்பா, மசாஜ் நிலையங்களில் விதிமீறல் என புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். பணம் பறிக்கும் நோக்கில் மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது. ஸ்பா என்றாலே பாலியல் தொழில் செய்யும் இடம் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்ப்பீர்களா?. அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.