டெல்லி: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விசாரணை நடத்த நிபுணர் குழு அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. இஸ்ரேலின் பெகாசஸ் செயலி மூலம் இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுகேட்கப்பட்ட போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த ஒரு குழு அமைக்க உத்தரவிடக்கோரி மூத்த பத்திரிகையாளர்கள், வழங்கறிஞர்கள் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.